Thursday, October 30, 2008

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த...


உடலுக்கும், உள்ளத்துக்கும் அவஸ்தை தரும் நோய்களில் முக்கியமானது சர்க்கரை நோய்.

பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருந்தால், அவரது 2 மகன்களில் ஒருவரை இந்த நோய் தாக்க அதிக வாய்ப்புள்ளது.

முறையான உணவு கட்டுப்பாட்டுகள் மற்றும் உடற்பயிற்சி மூலம் இதை கட்டுப்படுத்த முடியும்.

இந்த நோயிலிருந்து பாதுகாத்து கொள்ள சில டிப்ஸ்.

நோய்க்கான காரணங்கள்:

* உடல் உழைப்பு இல்லாதது.

* சிப்ஸ் போன்ற எண்ணெயில் பொறித்த பொருட்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டு கொண்டே இருப்பது.

செய்ய வேண்டியது:

* தினமும் `வாக்கிங்' செல்லலாம். உடற் பயிற்சிகள் செய்வது நல்லது.

* கொய்யாப்பழம், பேரிக்காய் ஆகியவை சாப்பிடலாம்.

* காலை, மாலை உணவாக சப்பாத்தி சாப்பிடலாம்.

* கோதுமை அல்லது கேழ்வரகு கஞ்சி சாப்பிடலாம்.

* மதியம் ஒருவேளை அரிசி சாதத்துடன் அதிகளவில் காய்கறிகளை சேர்க்கலாம்.

தவிர்க்க வேண்டியது:

* 3 வேளையும் அரிசி சாதம் உண்பதை தவிர்க்கவும்.

* வாழைப்பழங்களை தவிர்க்கவும்.

* இனிப்பு பொருட்களை தவிர்க்கவும்.

No comments: